தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு முன்னரே காற்றாலை மின் உற்பத்தி சீசன் துவக்கம்..!

நடப்பு ஆண்டுக்கான சீசனிலும் 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் 31 வரை அதிகமான காற்றாலை மின் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது.


கோவை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஒரு மாதத்திற்கு முன்னரே துவங்கியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் துவங்கியுள்ளது.

இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(IWPA) தலைவர், கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:-



நடப்பாண்டு தென்கிழக்கு பருவக்காற்று மார்ச் 15 முதல் துவங்கியது. மார்ச் 20 அன்று நாள் முழுவதும் காற்று சீரான முறையில் வீசியது. இதனால் அன்றைய தினம் 47.7 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

மார்ச் 21 திங்கட்கிழமை 35.9 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இன்று மார்ச் 22 சீரான அளவில் காற்று வீசி வருகிறது. 2021 ஏப்ரல் 1 முதல் 2022 மார்ச் 31 வரை கடந்த ஆண்டு சீசன் உள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தான் சீசன் துவங்கும்.

ஆனால், இந்தாண்டு ஐந்து வாரங்களுக்கு முன்பே சீசன் மார்ச்சில் துவங்கி உள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31 வரை கடந்த ஆண்டு சீசன் கணக்கு உள்ளதால் 11 லட்சம் யூனிட் மின்சாரம் 2021- 22 ஆண்டில் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அதேபோல், நடப்பு ஆண்டுக்கான சீசனிலும் 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் 31 வரை அதிகமான காற்றாலை மின் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு, கஸ்தூரி ரங்கையன் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...