அன்னூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார்..!

மேலும், படியில் தொங்கியபடி பயணிக்க அனுமதித்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு தலா ரூ. 600 அபராதம் விதிப்பு.



கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து வருகின்றனர்.

இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வீடு திரும்பும் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அன்னூர் போலீசார் கோவை சாலையில் பயணிகள் தொங்கியபடி சென்ற பேருந்துகளை தடுத்து நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தலா ரூ.600 அபராதம் விதித்தனர்.



மேலும், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை கீழே இறக்கி அறிவுரை கூறிய போலீசார் பேருந்தில் படியில் தொங்கியபடி பயணிக்க மாட்டோம் எனவும், மீறி பயணித்தால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவோம் எனவும் உறுதிமொழி ஏற்க செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



இச்சம்பவம் படிக்கட்டு ரோமியோக்களுக்கு ஒரு பாடமாகவே உள்ளது எனலாம்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...