கோவை சரவணம்பட்டி, சிங்காநல்லூர் பகுதியில் பாலம் கட்டுவதற்காக 221-கோடி ஒதுக்கீடு.!!

சிங்காநல்லூர் பகுதிக்கு 141-கோடியே 80-லட்சமும், சரவணம்பட்டியில், காளப்பட்டி ரோடு சந்திப்பு, துடியலூர் ரோடு சந்திப்பு இரண்டையும் இணைக்கும் வகையில் 80-கோடியே 48-லட்சம் ஒதுக்கீடு.


கோவை: கோவை சரவணம்பட்டி, சிங்காநல்லூர் பகுதியில் பாலம் கட்டுவதற்காக 221-கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரினை மூன்று தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்கின்றது. இதில் ஒரு சாலை மட்டுமே புறவழிச்சாலை ஆகவும், மற்ற இரண்டும் மாநகரினை ஊடுருவிச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இந்த போக்குவரத்து நெரிசலைச் சீர் அமைப்பதற்காக உக்கடம் ஆத்துப்பாலம் இடையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைப்பட்டு வருகின்றது.

மேலும் திருச்சி ரோட்டில் சுங்கம் பகுதியில் பாலம் கட்டும் பணியானது முடியும் தருவாயில் உள்ளது. மேட்டுப்பாளையம் ரோட்டிலும் இரண்டு பாலங்கள் புதிதாகக் கட்டும் பணியானது துவங்கியுள்ளது.

சுந்தராபுரம் சந்திப்பு, எல்லாண்டிபுரம் சந்திப்பு, கணபதி சந்திப்பில் மூன்று பாலங்கள் கட்டும் பணிக்கான ஒப்புதலும் நிதியையும் மத்திய போக்குவரத்து அமைச்சகத்தால் கடந்த மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், இதற்கான பணிகள் தமிழக அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி சிங்காநல்லூர் பகுதிகளில் புதிதாக மேம்பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டினை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை செய்துள்ளது.

சிங்காநல்லூர் சந்திப்பில் பாலம் அமைப்பதற்காக 141 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சரவணம்பட்டியில் , காளப்பட்டி ரோடு சந்திப்பு, துடியலூர் ரோடு சந்திப்பு இரண்டையும் இணைக்கும் வகையில் 80 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, மொத்தம் 221 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...