22-வது வார்டில் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: கவுன்சிலர் கோவை பாபு வாக்குறுதி..!

22-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசுப்பள்ளிகளில் காணப்படும் குறைகள் அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாண்மை குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.


கோவை: 22-வது வார்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என, மேலாண்மை குழுக் கூட்டத்தில் கவுன்சிலர் கோவை பாபு வாக்குறுதி அளித்தார்.

கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மைக் குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில், மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் நிறை, குறைகள் குறித்துப் பெற்றோர்கள் பேசினர்.



இதுகுறித்து கோவை மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு பேசியதாவது:-

தமிழகத்தில் மக்களின் பேராதரவுடன் ஆட்சி பொறுப்பேற்று சீரான முறையில் பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, கல்வித்துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

சமீபத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூட தமிழக கல்வித்துறை சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசுப்பள்ளிகளில் காணப்படும் குறைகள் அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.

இவ்வாறு கவுன்சிலர் கோவை பாபு தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...