வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ்:'வேலைவாய்ப்பு முகாம்' 26-ந் தேதிக்கு மாற்றம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு..!

இந்த முகாமில் உற்பத்தி, ஜவுளித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, மருத்துவம், வங்கி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த 170-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.



கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக வருகிற 26-ந் தேதி காலை 9-மணியளவில் சூலூர் ஆர்.வி.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் மூலமாக தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த முகாம் நிர்வாக காரணங்களுக்காக வருகிற 26-ந் தேதி காலை 9 மணியளவில் சூலூர் ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கிறது.

இந்த முகாமில் உற்பத்தி, ஜவுளித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, மருத்துவம், வங்கி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த 170-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இதில், 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாமில், சுயவிவரம், கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

இங்குத் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை உடனே வழங்கப்படும். பணி நியமனம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் www.tbprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும்.

வேலைதேடும் இளைஞர்கள் முகாமை பயன்படுத்திப் பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...