இந்த முகாமில் உற்பத்தி, ஜவுளித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, மருத்துவம், வங்கி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த 170-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக வருகிற 26-ந் தேதி காலை 9-மணியளவில் சூலூர் ஆர்.வி.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் மூலமாக தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த முகாம் நிர்வாக காரணங்களுக்காக வருகிற 26-ந் தேதி காலை 9 மணியளவில் சூலூர் ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கிறது.
இந்த முகாமில் உற்பத்தி, ஜவுளித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, மருத்துவம், வங்கி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த 170-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
இதில், 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாமில், சுயவிவரம், கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.
இங்குத் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை உடனே வழங்கப்படும். பணி நியமனம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் www.tbprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும்.
வேலைதேடும் இளைஞர்கள் முகாமை பயன்படுத்திப் பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.