காரமடை முறுக்கிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்: நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.!!

புவிசார் குறியீடு வழங்கப்பட்டால் காரமடை நகராட்சியின் வளர்ச்சிக்கு அது முக்கிய அங்கமாக இருக்கும் என நகர்மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


கோவை: இந்தியா முழுவதும் ஏற்றுமதியாகும் காரமடை முறுக்கிற்கு அங்கீகாரம் அளிக்க காரமடை நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் காரமடையில் தரம் உயர்த்த நகராட்சியின் முதல் கூட்டத் தொடர் நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. நகராட்சிஅலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காரமடை நகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 27-வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் 14-தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவிற்குச் சுகாதாரம், கழிப்பறை, குடிநீர் வழங்க மட்டும் செலவீனங்களாக ரூ.23-லட்சம் கணக்கு காட்டப்பட்ட நிலையில் அது குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள்கடுமையான ஆட்சேபேணை தெரிவித்து அதிகாரிகளிடம் கணக்கு கேட்டு கோப்புகளை ஆய்வு செய்தனர்.



பின்னர், கூட்டத்தில் பேசிய இரண்டாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் குருபிரசாத் காரமடையில் நெடுங்காலமாகப் பாரம்பரிய முறைப்படி கை முறுக்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், அதற்கான அங்கீகரித்த காரமடைபெறும் வகையில் காரமடை கை முறுக்கிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானத்தைக்கொண்டு வரப்பட்டது.



அதற்கு மற்றவர்கள் இசைவு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காரமடை நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு வழங்கப்பட்டால் காரமடை நகராட்சியின் வளர்ச்சிக்கு அது முக்கிய அங்கமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...