கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியை 3-கோடிக்கு தத்தெடுக்கும் மார்ட்டின் குரூப்.!!

ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், நூலகம், விளையாட்டு மைதானம், சமையலறை, உணவருந்தும் பகுதி, கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை புதிதாகக் கட்டிக் கொடுக்கிறது.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைத்தத்தெடுத்து ரூபாய் 3-கோடி மதிப்பில் பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தர இருக்கிறது.



ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், நூலகம், விளையாட்டு மைதானம், சமையலறை, உணவருந்தும் பகுதி, கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை புதிதாகக் கட்டிக் கொடுக்கிறது. இதேபோன்று பழைய வகுப்பறைகளையும் புனரமைத்துக் கொடுக்கிறது.



இதன் மூலம் இந்த பள்ளி அனைத்து வசதிகளிலும் தன்னிறைவு பெறுவதோடு, அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்கிறது.



அரசுப் பள்ளிகளிலும் தொழில்நுட்பம் வழியாகக் கல்வி கற்பிக்கப்படும் நிலை உருவாகுவதோடு, ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்குக் கல்வி மீதான ஆர்வமும் கூடும்.

இதுபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, பள்ளிகளில் நூலகம், வகுப்பறை புதுப்பித்தல், கணிப்பொறி வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி போன்ற விஷயங்களுக்கு வருடத்திற்குச் சராசரியாக 2-கோடி ரூபாயை மார்ட்டின் குரூப் செலவு செய்து வருகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...