பொள்ளாச்சியில் பிஏபி பாசன சபை தேர்தலில் 114-மனுக்கள் ஏற்பு.!!

போட்டியிடும் வேட்பாளர்களுக்குக் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். வரும் 27-ம் தேதி காலை 7-மணி முதல் 2-மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பிஏபி பாசன சபை தேர்தலில் வேட்புமனு பரிசீலனை 123- மனுக்களில், 114-மனுக்கள் ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சியில் உள்ள, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில், ஆழியாறு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் தேர்தல் கடந்த 8-ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படவில்லை.

இந்நிலையில், பிஏபி பாசன சங்க தலைவர் தேர்தலை நடத்தக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஆழியாறு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், வரும் 27-ம்நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டது.

இதற்காக, கடந்த 16-ம் தேதி அன்று, ஆழியாறு பாசன சங்க தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து வேட்புமனு பெறும் நிகழ்வு, பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை நேற்று பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 111-இடங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், 123-வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. இதில், 1-மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், 8-மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதாகும், மீதமுள்ள 114-மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், போட்டியிடும் வேட்பாளர்களுக்குக் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், வரும் 27-ம் தேதி காலை 7-மணி முதல் 2-மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்றும், மாலை 4-மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...