இதில் அரசு மற்றும் தனியார்ப் பள்ளி மாணவ-மாணவிகள், கலந்து கொண்டு மலைவாழ் மக்களுடன் சேர்ந்து நடனமாடி அசத்தினார்.
கோவை: உலக வன நாளை முன்னிட்டு பொள்ளாச்சியை அடுத்த ஆழியாற்றில் மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி கொண்டாடினர்.
ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் வருடம்தோறும் உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில், உலக வன நாளை முன்னிட்டு, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, அங்கு மஞ்சப்பைகளைத் தோரணமாகக் கட்டி தொங்கவிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவிகள் கவியருவி அருகேமரக்கன்றுகளை நட்டினர். இதேபோல, உலக வன நாளை முன்னிட்டுடாப்சிலிப்பை அடுத்த கோழிகமுத்தியில் உள்ள மலைவாழ் மக்கள் தங்கள் பாரம்பரிய நடனமாடி பாட்டுப் பாடினர்.
இதில் அரசு மற்றும் தனியார்ப் பள்ளி மாணவ மாணவிகள், கலந்து கொண்டு மலைவாழ் மக்களுடன் சேர்ந்துநடனமாடி அசத்தினார்.
இந்த நிகழ்வில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன், வன உதவி பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் காசிலிங்கம், வனவர்கள் பிரபாகரன், சபரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் வருடம்தோறும் உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில், உலக வன நாளை முன்னிட்டு, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, அங்கு மஞ்சப்பைகளைத் தோரணமாகக் கட்டி தொங்கவிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவிகள் கவியருவி அருகேமரக்கன்றுகளை நட்டினர். இதேபோல, உலக வன நாளை முன்னிட்டுடாப்சிலிப்பை அடுத்த கோழிகமுத்தியில் உள்ள மலைவாழ் மக்கள் தங்கள் பாரம்பரிய நடனமாடி பாட்டுப் பாடினர்.
இதில் அரசு மற்றும் தனியார்ப் பள்ளி மாணவ மாணவிகள், கலந்து கொண்டு மலைவாழ் மக்களுடன் சேர்ந்துநடனமாடி அசத்தினார்.
இந்த நிகழ்வில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன், வன உதவி பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் காசிலிங்கம், வனவர்கள் பிரபாகரன், சபரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.