பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற 77 வயது அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது..!

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற 77 வயது அரசுப் பள்ளி ஆசிரியரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற 77 வயது அரசு பள்ளி ஆசிரியர் எபினேசர் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமியின் தந்தையும் சிறுவயது முதல் குடும்ப நண்பர்கள் ஆவர்.

இந்நிலையில், நேற்று காலை சிறுமியின் தந்தையும், தாயும் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது அங்கு சென்ற ஆசிரியர் எபினேசர் சிறுமியை மடியில் அமர வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த பெற்றோர் சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டு விசாரித்த பொழுது எபினேசர் சிறுமியிடம் தவறாக நடந்திருப்பது தெரியவந்தது.

சிறுமியின் பெற்றோர் எபினேசர் வீட்டுக்குச் சென்று கேட்டபொழுது முறையாக எபினேசர் பதிலளிக்காததால் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எபினேசர் மீது புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் எபினேசர் சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது உறுதியானது.

பின்னர், போலீசார் எபினேசர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...