கோவை கிணத்துக்கடவு அருகே சாலையை கடக்க முயன்ற வணிகவரித்துறை அலுவலக ஊழியர் கார் மோதி பரிதாபமாக பலி..!

இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சாலையை கடக்க முயன்ற வணிகவரித்துறை அலுவலக ஊழியர் கார் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மோதிராபுரம், ஜெகஜீவராம் வீதியை சேர்ந்தவர் சித்திரகுமார் (45). இவர் பொள்ளாச்சி வணிக வரித்துறையில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு லதாடெய்சிராணி (41) என்ற மனைவியும், தமிழ்மணி, செவந்தமணி (19) மகாலட்சுமி (17) என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் தமிழ்மணி கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் சக்தி நகரில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் பொள்ளாச்சியில் இருந்து சித்திரகுமார் குடும்பத்துடன் கிணத்துக்கடவு சக்திநகர் பகுதியில் உள்ள மகள் தமிழ்மணி வீட்டிற்கு வந்துள்ளனர்.

பின்னர், பொள்ளாச்சி செல்ல மனைவி மற்றும் மகள்கள் இருவரும் முன்னதாக காரில் சென்று அரசம்பாளையம் பிரிவில் காத்திருந்திருந்தனர்.

இதனையடுத்து மகள் தமிழ்மணி வீட்டில் இருந்து சித்திரகுமார் ஜெயபிரகாஷ் என்பவருடன் பைக்கில் வந்து அரசம்பாளையம் பிரிவு விநாயகர் கோவில் முன்பு இறங்கி எதிரே உள்ள காருக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த கார் சித்திரகுமார் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சித்திரகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதையடுத்து, அங்கு சித்திரகுமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...