மண்‌ வளம்‌ காக்க 100 நாள்‌ பைக்‌ பயணத்தை லண்டனில்‌ இருந்து தொடங்கிய சத்குரு..!

மண்‌ வளத்தை பாதுகாக்க சட்டங்கள்‌ இயற்றவும்‌, விழிப்புணர்வு ஏற்படுத்தவும்‌ 3 கண்டங்களில்‌ 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ பயணம் மேற்கொள்ள திட்டம்.


கோவை: உலக அளவில்‌ மண்‌ வளத்தை பாதுகாக்க சட்டங்கள்‌ இயற்றவும்‌, அதுகுறித்து மக்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தவும்‌ 100 நாள்‌ மோட்டார்‌ சைக்கிள்‌ பயணத்தை சத்குரு இன்று (மார்ச்‌ 21) லண்டனில்‌ இருந்து தொடங்கினார்.



வரலாற்று சிறப்புமிக்க ட்ரஃபல்கர்‌ சதுக்கத்தில்‌ 7 வயது சிறுமி கொடி அசைத்து இப்பயணத்தை தொடங்கி வைத்தார்‌.



இதையொட்டி, அங்கு ஏராளமான மக்கள்‌ இரண்டு சவால்கள்‌ நிறைந்த பயணத்தை மேற்கொள்ளும்‌ சத்குருவுக்கு வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தனர்‌. முன்னதாக, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ பங்கேற்ற நிகழ்ச்சியில்‌ சத்குரு உரை நிகழ்த்தினார்‌. மேலும்‌, மற்றொரு பொதுக்‌ கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்‌.



லண்டனில்‌ இருந்து புறப்பட்ட சத்குரு இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும்‌ மத்திய கிழக்கு நாடுகள்‌ வழியாக 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார்‌ சைக்கிளில்‌ 3 கண்டங்களில்‌ 27 நாடுகளுக்கு பயணித்து இந்தியா திரும்ப உள்ளார்‌. இப்பயணத்தில்‌ அவர்‌ பல்வேறு நாடுகளின்‌ தலைவர்கள்‌, இசை கலைஞர்கள்‌, விளையாட்டு வீரர்கள்‌, சுற்றுச்சூழல்‌ வல்லுனர்கள்‌ என பல தரப்பட்ட பிரபலங்களுடன்‌ மண்‌ வள பாதுகாப்பு குறித்து கலந்துரையாட உள்ளார்‌. மேலும்‌, அந்தந்த நாடுகளில்‌ முன்னணி ஊடகங்களுக்கு பேட்டியும்‌ கொடுக்க உள்ளார்‌.

இது தவிர, மே மாதம்‌ ஐவெரி கோஸ்ட்‌ நாட்டில் ஐ.நாவின்‌ பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பு (UNCCD) நடத்தும்‌ COP 15 என்ற சர்வதேச சுற்றுச்சூழல்‌ மாநாட்டில்‌ உரை நிகழ்த்த உள்ளார்‌. இதில் 170க்கும்‌ மேற்பட்ட நாடுகளின்‌ பிரதிநிதிகள்‌ கலந்து கொள்ள இருக்கின்றனர்‌. மேலும்‌, டாவோஸில்‌ நடக்கும்‌ உலக பொருளாதார மாநாட்டிலும்‌ சத்குரு கலந்து கொண்டு உரை ஆற்ற உள்ளார்‌.

சத்குரு தொடங்கியுள்ள மண்‌ காப்போம்‌ இயக்கத்தின்‌ மூலம்‌ உலகம்‌ முழுவதும்‌ சுமார்‌ 350 கோடி மக்களிடம்‌ மண்‌ வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வாரம்‌ 6 கரீபியன்‌ நாடுகள்‌ தங்கள்‌ நாடுகளில்‌ மண்‌ வளத்தை மேம்படுத்த மண்‌ காப்போம்‌ இயக்கத்துடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின்‌ பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பின்‌ (UNCCD) ஆய்வின்‌ படி, தற்போது உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்‌, 2050ம்‌ ஆண்டிற்குள்‌ உலகில்‌ உள்ள 90 சதவீதம்‌ மண்‌, அதன்‌ வளத்தை இழந்து விடும்‌ அபாயம்‌ இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்‌, உலகளவில்‌ உணவு மற்றும்‌ தண்ணீர்‌ பற்றாக்குறை ஏற்பட்டு, பஞ்சம்‌ மற்றும்‌ பட்டினிச்‌ சாவுகள்‌ ஏற்படும்‌ எனவும்‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...