போக்கியத்திற்கு வீட்டினை கொடுத்துவிட்டு ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு.!!

மனு அளிக்க வந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் தங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.



கோவை: போக்கியத்திற்கு வீட்டினை கொடுத்துவிட்டு ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் சுதா என்கிற கனிமொழி என்பவர் தனக்குச் சொந்தமான வீட்டினை நான்கு குடும்பத்தாருக்குப் போக்கிய ஒப்பந்த அடிப்படையில் 28 லட்சத்துக்கும் அதிகமாகத் தொகையினை பெற்றுக்கொண்டு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஒப்பந்தத்தில் உள்ள போதே வீட்டினை வேறொருவருக்கு விற்பனை செய்ததோடு வீட்டினை வாங்கியவர் வங்கியில் அடமானம் வைத்துள்ளார். மேலும் சரிவரத் தவணை தொகை தராததால் வங்கி நிர்வாகம் வீட்டினை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து போக்கிய தொகையினை திரும்பக் கேட்டு சுதாவை அணுகிய போது தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த வாடகைதாரர்கள் இச்சம்பவம் தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துக் கடந்த செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை தங்கள் பணம் கிடைக்காததால் உரிய நடவடிக்கை கோரி தங்கள் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு அளிக்க வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் தங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...