தமிழரின் பாரம்பரிய உடையில் சங்கரா கல்லூரியில் பொங்கல் திருவிழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவிற்கு சங்கரா கல்வி நிறுவனங்களின் செயலர் இராமச்சந்திரன், இணைச்செயலர் சந்தியா இராமச்சந்திரன், துணை இணைச்செயலர் நித்யா இராமச்சந்திரன் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.



பொங்கல் விழாவில், மாணவியர்களுக்குக் கோலப்போட்டியும், மாணவர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, உறியடித்தல் போட்டியும், கரகாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம், சிலம்பாட்டம், கலரிபயிட்று சிறப்பாக நடைபெற்றன.





துறைவாரியாகப் பொங்கல் போட்டியும் நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்திருந்தது விழாவினை மேலும் சிறப்பாக்கியது.  





கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், துணைமுதல்வர் பெர்னார்டுஎட்வர்டு, அனைத்துத் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.





Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...