தமிழரின் பாரம்பரிய உடையில் சங்கரா கல்லூரியில் பொங்கல் திருவிழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவிற்கு சங்கரா கல்வி நிறுவனங்களின் செயலர் இராமச்சந்திரன், இணைச்செயலர் சந்தியா இராமச்சந்திரன், துணை இணைச்செயலர் நித்யா இராமச்சந்திரன் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.



பொங்கல் விழாவில், மாணவியர்களுக்குக் கோலப்போட்டியும், மாணவர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, உறியடித்தல் போட்டியும், கரகாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம், சிலம்பாட்டம், கலரிபயிட்று சிறப்பாக நடைபெற்றன.





துறைவாரியாகப் பொங்கல் போட்டியும் நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்திருந்தது விழாவினை மேலும் சிறப்பாக்கியது.  





கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், துணைமுதல்வர் பெர்னார்டுஎட்வர்டு, அனைத்துத் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.





Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...