தமிழரின் பாரம்பரிய உடையில் சங்கரா கல்லூரியில் பொங்கல் திருவிழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவிற்கு சங்கரா கல்வி நிறுவனங்களின் செயலர் இராமச்சந்திரன், இணைச்செயலர் சந்தியா இராமச்சந்திரன், துணை இணைச்செயலர் நித்யா இராமச்சந்திரன் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.



பொங்கல் விழாவில், மாணவியர்களுக்குக் கோலப்போட்டியும், மாணவர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, உறியடித்தல் போட்டியும், கரகாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம், சிலம்பாட்டம், கலரிபயிட்று சிறப்பாக நடைபெற்றன.





துறைவாரியாகப் பொங்கல் போட்டியும் நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்திருந்தது விழாவினை மேலும் சிறப்பாக்கியது.  





கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், துணைமுதல்வர் பெர்னார்டுஎட்வர்டு, அனைத்துத் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.





Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...