மழைநீர் வடிகால்களில் உள்ள சாக்கடை நீர் அடைப்பு, குப்பைகள் சுத்தம் செய்தல், ரோந்து வாகனம் வருவதை உறுதி செய்தல் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளைப் பொதுமக்கள் முன் வைத்தனர்.
கோவை: 52-வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி லால்பகதூர் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்தார்.

கோவை லால்பகதூர் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அங்கே அமையப்பெற்றுள்ள மழைநீர் வடிகால்களில் உள்ள சாக்கடை நீர் அடைப்பு, குப்பைகள் சுத்தம் செய்தல், அப்பகுதியில் காவல் துறை ரோந்து வாகனம் வருவதை உறுதி செய்தல் வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளைப் பொதுமக்கள் முன் வைத்தனர்.
குறிப்பாகக் குப்பைகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதனைக் குறித்துக் கேட்டறிந்த 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி. இந்த பிரச்சனைகள் குறித்துச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, சரிசெய்து தருவதாக உறுதியளித்தார்.
கோவை லால்பகதூர் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அங்கே அமையப்பெற்றுள்ள மழைநீர் வடிகால்களில் உள்ள சாக்கடை நீர் அடைப்பு, குப்பைகள் சுத்தம் செய்தல், அப்பகுதியில் காவல் துறை ரோந்து வாகனம் வருவதை உறுதி செய்தல் வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளைப் பொதுமக்கள் முன் வைத்தனர்.
குறிப்பாகக் குப்பைகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதனைக் குறித்துக் கேட்டறிந்த 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி. இந்த பிரச்சனைகள் குறித்துச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, சரிசெய்து தருவதாக உறுதியளித்தார்.