2500க்கும் மேற்பட்ட கிறுத்துவ குடும்பங்கள் வசித்து வரும் அப்பகுதியில் மயானத்திற்கு என இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
கோவை: கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் வசிக்கும் 2500 குடும்பங்களுக்கு மயானம் வேண்டுமென பாதிரியார் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் சிறுபான்மை மக்களான கிறித்துவர்கள் 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாதிரியார் தலைமையில் தங்களுக்கு கல்லறை வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
தங்கள் பகுதியில் கிறிஸ்தவ மக்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் மக்களுக்கு மயான வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் மயானத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளதாகவும் இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் பயன்பாட்டிற்காக மயானத்திற்கு என இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் சிறுபான்மை மக்களான கிறித்துவர்கள் 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாதிரியார் தலைமையில் தங்களுக்கு கல்லறை வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
தங்கள் பகுதியில் கிறிஸ்தவ மக்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் மக்களுக்கு மயான வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் மயானத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளதாகவும் இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் பயன்பாட்டிற்காக மயானத்திற்கு என இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.