கோவை துடியலூர் பகுதியில் உள்ள புது முத்து நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி நரிக்குறவர் மக்கள் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், இப்பகுதியில் 65-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 40- ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும், தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு கோரி கடந்த 10-ஆண்டுகளாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் இல்லையெனில் சாலை மறியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறும் போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் கூறினர்.

தங்கள் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க அப்பகுதியில் உள்ள அதிமுகவை சேர்ந்த அனுபவ்ரவி என்பவர் தடையாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், இப்பகுதியில் 65-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 40- ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும், தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு கோரி கடந்த 10-ஆண்டுகளாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் இல்லையெனில் சாலை மறியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறும் போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் கூறினர்.
தங்கள் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க அப்பகுதியில் உள்ள அதிமுகவை சேர்ந்த அனுபவ்ரவி என்பவர் தடையாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.