குரும்ப பாளையம் அருகே டீசல் டேங்கர் லாரி - டூவீலர் மோதி விபத்து; பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலி..!

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் டீசல் டேங்கர் லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: குரும்ப பாளையம் அருகே டீசல் டேங்கர் லாரி - டூவீலர் மோதி ஏற்பட்ட விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளானைப்பட்டி கைக்கோளாம்பாளையம் வண்ணான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு(67). இவரது மகன் அருண்(19). தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார்.

இவர்கள் இருவரும் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர். மாணவர் அருண் வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது, குரும்ப பாளையம் டூ காளப்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே அசுர வேகத்தில் வந்த டீசல் ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் வந்த லாரி கல்லூரி மாணவர் ஓட்டி வந்த டூவீலர் மீது பலமாக மோதியுள்ளது.

இதில் அருண் தூக்கி வீசப்பட்டுள்ளார். தூக்கி வீசப்பட்ட வேகத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது தந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்துள்ள இருவரையும் மீட்டு கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளித்துள்ளனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவர் அருணை அனுமதித்தனர். இந்நிலையில் அருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாகப் பலியானார்.



இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் டீசல் டேங்கர் லாரி டிரைவர் மாணிக்கத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டீசல் டேங்கர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...