கிணத்துக்கடவு அருகே காரச்சேரியில் மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழப்பு..!

இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் கல்குவாரி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே காரச்சேரியில் மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே உள்ள ஒத்தகால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34) லாரி டிரைவரான இவரும், மாணவி நளினியுடன் கடந்த 6 மாதமாக கிணத்துக்கடவு அருகே உள்ள காரச்சேரி பகுதியில் உள்ள தனியார்கல்குவாரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வேலைக்குச் சென்ற ராஜ்குமார் தான் ஓட்டி வந்த டிப்பர் லாரியை வாட்டர் சர்வீஸ் செய்வதற்குத் தண்ணீர் மோட்டாரை ஆன் செய்துவிட்டு குழாயைக் கையில் பிடிக்கும் போது திடீரென அதன் எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் ராஜ்குமாரை உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் கல்குவாரி உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் மேலாளர் சரண்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...