பேரூர் அருகே உயிரிழந்த ஆதரவற்ற முதியவருக்கு உரிய மரியாதை செய்த பேரூராட்சி தலைவர்.!!

உயிரிழந்த ஆதரவற்ற முதியவருக்கு உரிய மரியாதை செய்த பேரூராட்சி தலைவரின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


கோவை: கோவை பேரூர் கோவில் அருகே உயிரிழந்த ஆதரவற்ற முதியவரின் உடலை உரிய மரியாதையுடன் அனுப்பி வைத்த பேரூராட்சி தலைவரின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.



கோவை பேரூர் பட்டீஸ்வரன் கோவில் அருகே ஆதரவற்ற முதியவர்கள் சிலர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கிருந்த முதியவர் ஒருவர் வயது மூப்பின் காரணமாக நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் பேரூர் போலீசுக்குத் தகவல் அளித்தனர். இதனிடையே தகவலறிந்து அங்கு வந்த பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை உயிரிழந்த முதியவருக்கு மாலை அணிவித்து வணங்கி உரிய மரியாதை செய்தார்.



இதையடுத்து அங்கிருந்த போலீசாரிடம்உடலை ஒப்படைத்தனர். இதையடுத்து, முதியவர் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த ஆதரவற்ற முதியவருக்கு உரிய மரியாதை செய்த பேரூராட்சி தலைவரின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...