குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை கையாள்வது சம்மந்தமாக நடைபெற்ற ஒரு நாள் பயிலரங்கத்தை, மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ஆர்.சுதாகர், துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கோவை: கோவை பணியிடை பயிற்சி மையம் சார்பாக, கோவை காவல் சரகத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை, திருப்பூர் மாநகரங்களை சார்ந்த அனைத்து பெண் காவல் அதிகாரிகளுக்கு,குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை கையாள்வது சம்மந்தமாக ஒரு நாள் பயிலரங்கம், கோவை நீலாம்பூர் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தை, மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ஆர்.சுதாகர், துவக்கி வைத்தார். இதையடுத்து, கடந்த ஓராண்டில் போக்சோ வழக்குகளில் சிறப்பாக கையாண்டு, அதிகப்படியான வழக்குகளில் தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்களுக்கும், கேடயங்களை பரிசாக வழங்கினார்.
அதேபோன்று, மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான எதிரிகளை குண்டர் தடுப்புக் காவலில் வைத்ததற்காக காவல் அதிகாரிகளுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவித்தார்.

இப்பயிலரங்கத்தில் நீதித்துறை, மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பணியிடை பயிற்சி மையத்தின் பொறுப்பு அதிகாரியான, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, மேற்பார்வையில் நடைபெற்ற இப்பயிலரங்கத்தில், உதவி ஆய்வாளர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை சுமார் 150-க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகளும், கோவை சரகத்திற்குட்பட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் போக்ஸோ வழக்குகளை சிறப்பாக கையாண்ட காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாகவும், சமீப காலமாக அதிகளவு போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யபடுவதாக கூறிய அவர், புறநகர் பகுதிகளிங் போக்ஸோ வழக்குகள் குறித்து விழிப்புணர்வை அதிகபடுத்த வேண்டும், என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த பயிலரங்கத்தை, மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ஆர்.சுதாகர், துவக்கி வைத்தார். இதையடுத்து, கடந்த ஓராண்டில் போக்சோ வழக்குகளில் சிறப்பாக கையாண்டு, அதிகப்படியான வழக்குகளில் தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்களுக்கும், கேடயங்களை பரிசாக வழங்கினார்.
அதேபோன்று, மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான எதிரிகளை குண்டர் தடுப்புக் காவலில் வைத்ததற்காக காவல் அதிகாரிகளுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவித்தார்.
இப்பயிலரங்கத்தில் நீதித்துறை, மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பணியிடை பயிற்சி மையத்தின் பொறுப்பு அதிகாரியான, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, மேற்பார்வையில் நடைபெற்ற இப்பயிலரங்கத்தில், உதவி ஆய்வாளர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை சுமார் 150-க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகளும், கோவை சரகத்திற்குட்பட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் போக்ஸோ வழக்குகளை சிறப்பாக கையாண்ட காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாகவும், சமீப காலமாக அதிகளவு போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யபடுவதாக கூறிய அவர், புறநகர் பகுதிகளிங் போக்ஸோ வழக்குகள் குறித்து விழிப்புணர்வை அதிகபடுத்த வேண்டும், என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.