கோவை மதுக்கரை சுங்கச்சாவடி அருகே ஹோலி கொண்டாடி விட்டு வீடு திரும்பிய வட மாநில இளைஞர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் யார்? எங்கு பணியாற்றி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை.
கோவை: கோவை மதுக்கரை சுங்கச்சாவடி அருகே ஹோலி கொண்டாடி விட்டு வீடு திரும்பிய வட மாநில இளைஞர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை மதுக்கரை அருகே வடமாநில இளைஞர் ஒருவர் ஹோலி கொண்டாடிவிட்டு, மதுபோதையில் அங்கிருந்த சுங்கச்சாவடி அருகே வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது போதையில் அந்த இளைஞர் மோதி கீழே விழுந்துள்ளார். இதில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயமடைந்தார். இதனால் சுங்கச்சாவடியில் இருந்த ஊழியர்கள் அந்த வடமாநில இளைஞரை பிடித்து, மது போதை தெளியும் வரை அங்கிருந்த அலுவலகத்தில் அமர வைத்தனர்.
இதையடுத்து, நள்ளிரவு 1 மணி அளவில் இளைஞரை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, சற்று நேரத்திலேயே சாலையில் நடந்து சென்ற அந்த இளைஞர் மீது பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த மதுக்கரை போலீசார் வடமாநில இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த வடமாநில இளைஞர் யார்? எங்கு பணியாற்றி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மதுக்கரை அருகே வடமாநில இளைஞர் ஒருவர் ஹோலி கொண்டாடிவிட்டு, மதுபோதையில் அங்கிருந்த சுங்கச்சாவடி அருகே வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது போதையில் அந்த இளைஞர் மோதி கீழே விழுந்துள்ளார். இதில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயமடைந்தார். இதனால் சுங்கச்சாவடியில் இருந்த ஊழியர்கள் அந்த வடமாநில இளைஞரை பிடித்து, மது போதை தெளியும் வரை அங்கிருந்த அலுவலகத்தில் அமர வைத்தனர்.
இதையடுத்து, நள்ளிரவு 1 மணி அளவில் இளைஞரை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, சற்று நேரத்திலேயே சாலையில் நடந்து சென்ற அந்த இளைஞர் மீது பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த மதுக்கரை போலீசார் வடமாநில இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த வடமாநில இளைஞர் யார்? எங்கு பணியாற்றி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.