கோவை - கேரளா எல்லையில், கேரளா கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, வாளையாறு அருகே லாரியின் தார்ப்பாய்க்குள் மறைத்து கடத்தப்பட்ட 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை வாளையாறு அருகே லாரியின் தார்ப்பாய்க்குள் மறைத்து கடத்தப்பட்ட 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு,3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை - கேரளா எல்லையான வாளையார் பகுதியில், கேரளா கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனைச்சாவடியில் ஈடுபட்டனர். அப்போது, கோவையிலிருந்து வாளையார் வழியாக கேரளாவிற்கு வந்த லாரி ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, லாரியின் கேபினில் போடப்பட்டிருந்த தார்ப்பாய்க்கு அடியில் 170 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் லாரியில் பயணித்தவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் கோட்டைக்கல்லை அடுத்த பாரம்மல் பகுதியைச் சேர்ந்த நவுபல் (33), திரூரை சேர்ந்த பாஷில் பிரோஸ் (28), பாலப்புராவைச் சேர்ந்த ஷாகித் (27)என்பதும் விசாரணையில் அவர்கள் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி வந்து மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் சில்லரை வியாபாரிகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 170 கிலோ கஞ்சா மற்றும் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து,3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் வாளையார் கலால் துறை ஆய்வாளர், ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை - கேரளா எல்லையான வாளையார் பகுதியில், கேரளா கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனைச்சாவடியில் ஈடுபட்டனர். அப்போது, கோவையிலிருந்து வாளையார் வழியாக கேரளாவிற்கு வந்த லாரி ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, லாரியின் கேபினில் போடப்பட்டிருந்த தார்ப்பாய்க்கு அடியில் 170 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் லாரியில் பயணித்தவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் கோட்டைக்கல்லை அடுத்த பாரம்மல் பகுதியைச் சேர்ந்த நவுபல் (33), திரூரை சேர்ந்த பாஷில் பிரோஸ் (28), பாலப்புராவைச் சேர்ந்த ஷாகித் (27)என்பதும் விசாரணையில் அவர்கள் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி வந்து மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் சில்லரை வியாபாரிகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 170 கிலோ கஞ்சா மற்றும் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து,3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் வாளையார் கலால் துறை ஆய்வாளர், ஜெயபிரகாஷ் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.