கைது செய்யப்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே ஏழூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பகுதியில் உள்ள ஆதித்யா கார்டன் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் எனப்படும் சீட்டு விளையாடி வருவதாக கிணத்துக்கடவு காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டிருந்த கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சூதாட்டத்திற்காக வைத்திருந்த ரூ. 450 பணமும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பகுதியில் உள்ள ஆதித்யா கார்டன் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் எனப்படும் சீட்டு விளையாடி வருவதாக கிணத்துக்கடவு காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டிருந்த கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சூதாட்டத்திற்காக வைத்திருந்த ரூ. 450 பணமும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.