கோவை எட்டிமடை பகுதியில் தடையை மீறி நடைபெற்ற ரேக்ளா பந்தையம்

கோவை எட்டிமடை பகுதியில் ஐல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் மீதான தடையை நீக்கக்கோரி, தடையை மீறி ரேக்ளா ஆர்வலர்கள் ரேக்ளா ஊர்வலம் நடத்தினர்.


ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோவையை அடுத்த எட்டிமடை பகுதியில் ஐல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் மீதான தடையை நீக்கக்கோரி, ரேக்ளா ஆர்வலர்கள் ரேக்ளா வண்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பாரிய விளையாட்டு போட்டிகளான ஐல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவை மீதான தடை காரணமாக நாட்டு மாடுகள் அழிய வாய்ப்பிருப்பதாகவும், பீட்டா அமைப்பை தடை செய்வதுடன் ஐல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்டவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரேக்ளா ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் இப்போட்டிகளுக்கு அனுமதி வழங்கவில்லை எனில், தடையை மீறி நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர். 



இதையடுத்து தடையை மீறி 50 க்கும் ரேக்ளா வண்டிகளில் 4 கிலோ மீட்டர் தூரம் ரேக்ளா ஊர்வலம் நடத்தப்பட்டது. எட்டிமடை பகுதியில் துவங்கிய ரேக்ளா ஊர்வலம் கிராம பகுதிகள் வழியாக சென்று மீண்டும் எட்டிமடை பகுதியை அடைந்தது. தடையை மீறி ரேக்ளா ஊர்வலம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...