சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்காக மண் கடத்தி வந்ததாக 4 லாரிகளை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, கோவை வீரபாண்டி பிரிவில் உள்ள கட்டிடப் பணிகளுக்காக மண் கடத்தி வந்ததாகக் கூறப்படும் 4 லாரிகளை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடப் பணிகளுக்காக சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியைப் பயன்படுத்தி முறைகேடாக மண் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அங்கு மண் கொட்டிக் கொண்டிருந்த 4 லாரிகளின் ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மண் அள்ளும் அனுமதியைப் பயன்படுத்தி முறைகேடாக மண் கொண்டு வந்ததாக தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து 4 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மண் கடத்தலில் தொடர்புடையவர்கள் மற்றும் அனுமதி முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடப் பணிகளுக்காக சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியைப் பயன்படுத்தி முறைகேடாக மண் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அங்கு மண் கொட்டிக் கொண்டிருந்த 4 லாரிகளின் ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மண் அள்ளும் அனுமதியைப் பயன்படுத்தி முறைகேடாக மண் கொண்டு வந்ததாக தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து 4 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மண் கடத்தலில் தொடர்புடையவர்கள் மற்றும் அனுமதி முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.