கோவை ஆலாந்துறையை அடுத்த காருண்யா காவல் நிலையத்தின் மதில் சுவர் மற்றும் கதவை உடைத்து சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பை நிலவியது.
கோவை: கோவையில் காவல் நிலையத்தின் மதில் சுவர் மற்றும் கதவை சேதப்படுத்தி சென்ற ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை ஆலாந்துறையை அடுத்த காருண்யா நகரில் உள்ள தனியார் கல்லூரி வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் இருந்து நேற்று இரவு ஒற்றை காட்டு யானை, சிறுவாணி சாலையில் வந்து கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டுவதற்காக நான்கு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில், திடீரென சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா காவல் நிலையத்தின் மதில் சுவர் மற்றும் கதவை உடைத்துக் கொண்டு பின்புறம் உள்ள தோட்டத்திற்குள் யானை நுழைத்தது.
சாலையில் சென்ற காட்டு யானை காவல் நிலைய மதில் சுவர் மற்றும் கதவை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ஆலாந்துறையை அடுத்த காருண்யா நகரில் உள்ள தனியார் கல்லூரி வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் இருந்து நேற்று இரவு ஒற்றை காட்டு யானை, சிறுவாணி சாலையில் வந்து கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டுவதற்காக நான்கு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில், திடீரென சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா காவல் நிலையத்தின் மதில் சுவர் மற்றும் கதவை உடைத்துக் கொண்டு பின்புறம் உள்ள தோட்டத்திற்குள் யானை நுழைத்தது.
சாலையில் சென்ற காட்டு யானை காவல் நிலைய மதில் சுவர் மற்றும் கதவை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.