கோவையில் வரையாடு பாதுகாப்பு திட்ட தலைமை அலுவலகம் அமைகிறது - முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ தகவல்….!

தமிழகத்தில் மாநில விலங்கினங்களை பாதுகாக்க வரையாடு பாதுகாப்பு திட்டம் மாநிலத்தில் முதல் முறையாக தொடங்கப்பட உள்ளது.


கோவை: கோவையில் வரையாடு பாதுகாப்பு திட்டத் தலைமை அலுவலகம் அமைய உள்ளதாக முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.

மாநில விலங்கான வரையாடு பாதுகாக்க தமிழக அரசு தனது பட்ஜெட்டில் வரையாடு பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், கோவையில் இத்திட்டத்திற்கான தலைமை அலுவலகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

2022-23க்கான தமிழக பட்ஜெட் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்க தமிழக அரசு தனது பட்ஜெட்டில் வரையாடு பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

விரைவில் செயல்பாட்டுக்கும் வர உள்ள இத்திட்டம் குறித்து சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாஹு கூறியதாவது:-

தமிழகத்தில் மாநில விலங்கினங்களை பாதுகாக்க வரையாடு பாதுகாப்பு திட்டம் மாநிலத்தில் முதல் முறையாக தொடங்கப்பட உள்ளது. அழிந்து வரும் உயிரினங்களை காப்பாற்றுவதற்கான பாதுகாப்பு முயற்சிகளில் இது குறிப்பிடத்தக்க படியாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழக்கூடிய வரையாடுகள், தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இந்த இனம் அழிந்து வரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இது மாநிலத்தின் சுற்றுச்சூழல் அமைப்புடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க அடையாளத்தைக் கொண்டிருப்பதால் நாம் அதைப் பாதுகாக்க வேண்டும்.” என்றார் சுப்ரியா சாஹு.

பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, 'திட்ட இயக்குனர்' தலைமையில் தனி பிரிவு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இத்திட்டத்திற்கான தலைமை அலுவலகம், கோவையில் விரைவில் அமைக்கப்படும் என்றார். மேலும் திட்டத்தை விளக்கிய அவர், விலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள மக்களைக் கண்காணித்து வரைபடமாக்குவதன் மூலம் பணிகளைத் தொடங்குவார்கள் என்றார்.

“நீலகிரியைப் பற்றிய சமீபத்திய ஆய்வு எங்களிடம் இல்லை. எனவே மேப்பிங் மற்றும் தரவு சேகரிப்புடன் இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டோம். அதன் வாழ்விடங்கள், இன தொகை சுருங்கி வருவதற்குப் பின்னால் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய இது உதவுகிறது. மேலும், இது சிறந்த புரிதலுக்கு உதவும் என்று நம்புகிறோம். அடுத்த கட்டத்தில், இனங்கள் அதன் பாரம்பரிய வாழ்விடங்களை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

பின்னர், அவைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான காரணிகளை வளப்படுத்துவதன் மூலம், வாழ்விடத்தை மேம்படுத்துவதில் நாம் பணியாற்ற வேண்டும். நீலகிரி தார் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஒரே நேரத்தில் நடைபெறும், என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் மாநிலத்தின் வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்தின் அறிவிப்பை வரவேற்கின்றனர். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க முடியும் என்றனர். ஒரு இனம் பாதுகாத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்க முடியும்.

இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் (NCF) வனவிலங்கு விஞ்ஞானி எம். அனந்தகுமார் கூறியதாவது:-

இந்த நடவடிக்கை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மலை புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்பின் முதன்மை இனங்கள் / குடை வகைகளைப் பாதுகாக்க உதவும் என்றார்.

“நீலகிரியில் முகூர்த்தி தேசிய பூங்கா, தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலை மலைகள் மற்றும் கேரளாவின் மூணாறு மலைகள் போன்ற சில இடங்கள் மட்டுமே உள்ளன. அவை புல்வெளிகளிலும் மலைச் சிகரங்களிலும் மட்டுமே வாழ்கின்றன. இந்த இனம் பாதுகாக்கப்பட்டால், அது போன்ற இடங்களில் சுற்றுச்சூழலை வளப்படுத்த உதவும்,” என்றார்.

வனவிலங்கு ஆர்வலர் ஓசை கே. காளிதாசன் கூறியதாவது:-

பாலக்காடு மலைத்தொடரின் இருபுறமும் தமிழக-கேரள எல்லையில் மட்டுமே காணப்படும் அரிய வகை வரையாடு, ஆராய்ச்சியின் படி, இப்பகுதியில் மொத்தம் 3,000 ஆடுகள் மட்டுமே உள்ளது. எனவே, அதன் வாழ்விடத்தை விரிவுபடுத்தி, வரையாடு இனத்தை பெருக்குவதுதான் அரசின் திட்டமாக இருக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு இனங்கள் கைப்பற்றப்பட்ட அதன் வாழ்விடத்தை மீட்டெடுப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். மேலும் மக்கள் வாழும் மாநில எல்லைப் பகுதிகளில் வேட்டையாடுவதைத் தடுக்க வேண்டும். இது போன்ற பல ஆரோக்கியமான செயல்பாடுகள் இந்த திட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்கிறார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...