கோவையின் கட்டமைப்பு வசதிகளுக்காக எந்த ஒதுக்கீடும் இல்லை என்பது ஏமாற்றமளிப்பதாக தகவல்.
கோவை: தமிழக அரசின் பட்ஜெட்டில் குறுந்தொழில்களின் நலனுக்காக எந்த திட்டமும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம் (TAPMA), தலைவர், R. கல்யாண் சுந்தரம் கூறியதாவது:-
தொழில்துறை வளர்ச்சியில் பிரதான பங்கு வகிக்கும் குறுந்தொழில்களின் நலனுக்காக தமிழக பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லாது ஏமாற்றம் அளிக்கிறது.
அறிவிக்கப்பட்டுள்ள 5 தொழிற்பேட்டைகளில் ஒன்றான கோவை தொழிற்பேட்டை முழுக்க குறுந்தொழில்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு ஒதுக்கப்படும்போது மத்திய அரசின் கிளஸ்டர் திட்டம் மூலம் அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்க முடியும்.
கோவையின் உள்கட்டமைப்புகள் குறிப்பாக பெரும்பாலான சாலைகள் தகர்ந்துள்ள நிலையில் கோவையின் கட்டமைப்பு வசதிகளுக்காக எந்த ஒதுக்கீடும் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம் (TAPMA), தலைவர், R. கல்யாண் சுந்தரம் கூறியதாவது:-
தொழில்துறை வளர்ச்சியில் பிரதான பங்கு வகிக்கும் குறுந்தொழில்களின் நலனுக்காக தமிழக பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லாது ஏமாற்றம் அளிக்கிறது.
அறிவிக்கப்பட்டுள்ள 5 தொழிற்பேட்டைகளில் ஒன்றான கோவை தொழிற்பேட்டை முழுக்க குறுந்தொழில்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு ஒதுக்கப்படும்போது மத்திய அரசின் கிளஸ்டர் திட்டம் மூலம் அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்க முடியும்.
கோவையின் உள்கட்டமைப்புகள் குறிப்பாக பெரும்பாலான சாலைகள் தகர்ந்துள்ள நிலையில் கோவையின் கட்டமைப்பு வசதிகளுக்காக எந்த ஒதுக்கீடும் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.