பல திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தும், தொழிற் பேட்டைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்றும் காட்மா சார்பில் அறிக்கை வெளியீடு.
கோவை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்த 2022-23ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை தொடர்பாக காட்மா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து காட்மா சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குறு, சிறு தொழில் முனைவோர்களுக்கு மூலதன மானியமாக 300 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும், கடன் உத்திரவாத திட்டத்திற்கு 100 கோடி வழங்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு 911.5 கோடி ரூபாய் வழங்கப்படும், தொழில்துறைக்கு 3261.91 கோடி ஒதுக்கப்படும்.
கோவை உட்பட தமிழக மாவட்டங்களில் தமிழக அரசின் சார்பில் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் மற்றும் தமிழக தொழிற்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ரூ.2517 கோடி ஒதுக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை நமது காட்மா சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில், தொழிற் பேட்டைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்று நமது காட்மா சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து காட்மா சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குறு, சிறு தொழில் முனைவோர்களுக்கு மூலதன மானியமாக 300 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும், கடன் உத்திரவாத திட்டத்திற்கு 100 கோடி வழங்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு 911.5 கோடி ரூபாய் வழங்கப்படும், தொழில்துறைக்கு 3261.91 கோடி ஒதுக்கப்படும்.
கோவை உட்பட தமிழக மாவட்டங்களில் தமிழக அரசின் சார்பில் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் மற்றும் தமிழக தொழிற்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ரூ.2517 கோடி ஒதுக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை நமது காட்மா சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில், தொழிற் பேட்டைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்று நமது காட்மா சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.