தக்காளி மற்றும் வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தி திருப்பூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியைத் தரையில் கொட்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: தக்காளி மற்றும் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து சமுதாய நலக்கூடம் மூலமாக விற்பனை செய்யத் தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தக்காளி மற்றும் சின்னவெங்காயத்தைத் தரையில் கொட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சின்ன வெங்காயத்திற்குக் கிலோவுக்கு 30-ரூபாயும், தக்காளி கிலோவுக்கு 15-க்கும் விலையை ஒன்றிய அரசு நிர்ணயிக்கக் கோரியும், தக்காளி மற்றும் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து சமுதாய நலக்கூடம் மூலமாக விற்பனை செய்யத் தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தக்காளி மற்றும் சின்னவெங்காயத்தைத் தரையில் கொட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் விவசாயிகள் வாழ்வாதாரம் கீழே சென்று கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதேயாகும். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சின்ன வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கு மட்டுமேதான் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

குறைந்த பட்சம் கிலோவுக்கு 30 ரூபாய் இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கும். அதே போன்ற தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது குறைந்த பட்சம் கிலோ 15 ரூபாய் இருந்தால் மட்டுமே கட்டுப்படியான விலை கிடைக்கும். இந்த விலை வீழ்ச்சியால் கடன் வாங்கிய விவசாயிகள் மிகக் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ஒன்றிய பிரதமர் அனைத்து உற்பத்திப் பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாகச் சேர்த்துக் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் கூறியிருந்தார். ஆனால் அவருடைய ஆட்சிக்காலத்தில் இதுவரை அவ்வாறு நடக்கவில்லை.



எனவே உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக உயர்த்தி குறைந்தபட்ச விலை நிர்ணயம் உற்பத்தி பொருட்களுக்குச் செய்ய வேண்டும், தமிழக அரசும் உடனடியாக சின்ன வெங்காயம் தக்காளியைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகக் குறைந்த பட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியைத் தரையில் கொட்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...