கோவை கிணத்துக்கடவு அருகே கேரளாவுக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!

மேலும், 300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்திய உமர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே காரில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஆய்வாளர் கோபிநாத் மற்றும் உதவி ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்ட காவலர்கள் நேற்று மாலை கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், வாளையாறு போன்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துகவுண்டனூர் முதுமலை முருகன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போலீசார் அதில் 50 கிலோ எடை கொண்ட 6 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரை ஓட்டி வந்த கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த உமர் என்பவரைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கி கேரளாவுக்கு கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, 300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் உமர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...