இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு 1000-மரக்கன்று பரிசாக வழங்கிய நீலகிரி ஆட்சியர்..!

தனக்குச் சிறப்பான முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா சிகிச்சை அளித்தமைக்காக, ஆயிரம் 'பசுமை மாறா மரக்கன்று' வழங்கி, நீலகிரி ஆட்சியர் பாராட்டி உள்ளார்.


கோவை: தனக்குச் சிறப்பான முறையில் கொரோனா சிகிச்சை அளித்தமைக்காக, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு ஆயிரம் மரக்கன்று பரிசாக வழங்கியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர் அம்ரித். இரண்டு மாதங்களுக்கு முன் அம்ரித், அவரது மனைவி மற்றும் உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

உயர் சிகிச்சைக்காகக் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற்றனர்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பாகச் சிகிச்சை அளித்தமைக்காக, ஆயிரம் 'பசுமை மாறா மரக்கன்று' வழங்கி, பாராட்டி உள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இதில், மருத்துவமனையின் டீன் ரவீந்திரன், கண்காணிப்பாளர் ரவிக்குமார், உதவி கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.

பின்னர், 17-துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், செவிலியர்கள் ஒவ்வொரு மரக்கன்றுகளுக்குப் பொறுப்பேற்று, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...