தனக்குச் சிறப்பான முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா சிகிச்சை அளித்தமைக்காக, ஆயிரம் 'பசுமை மாறா மரக்கன்று' வழங்கி, நீலகிரி ஆட்சியர் பாராட்டி உள்ளார்.
கோவை: தனக்குச் சிறப்பான முறையில் கொரோனா சிகிச்சை அளித்தமைக்காக, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு ஆயிரம் மரக்கன்று பரிசாக வழங்கியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர் அம்ரித். இரண்டு மாதங்களுக்கு முன் அம்ரித், அவரது மனைவி மற்றும் உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
உயர் சிகிச்சைக்காகக் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற்றனர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பாகச் சிகிச்சை அளித்தமைக்காக, ஆயிரம் 'பசுமை மாறா மரக்கன்று' வழங்கி, பாராட்டி உள்ளார்.
மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இதில், மருத்துவமனையின் டீன் ரவீந்திரன், கண்காணிப்பாளர் ரவிக்குமார், உதவி கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.
பின்னர், 17-துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், செவிலியர்கள் ஒவ்வொரு மரக்கன்றுகளுக்குப் பொறுப்பேற்று, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர் அம்ரித். இரண்டு மாதங்களுக்கு முன் அம்ரித், அவரது மனைவி மற்றும் உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
உயர் சிகிச்சைக்காகக் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற்றனர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பாகச் சிகிச்சை அளித்தமைக்காக, ஆயிரம் 'பசுமை மாறா மரக்கன்று' வழங்கி, பாராட்டி உள்ளார்.
மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இதில், மருத்துவமனையின் டீன் ரவீந்திரன், கண்காணிப்பாளர் ரவிக்குமார், உதவி கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.
பின்னர், 17-துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், செவிலியர்கள் ஒவ்வொரு மரக்கன்றுகளுக்குப் பொறுப்பேற்று, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.