கோவையில் இறந்தவர் பெயரில் ஆள் மாறாட்டம்: நிலத்தை அபகரித்த 4-பேருக்கு போலீசார் வலைவீச்சு.!

சூலூர் அடுத்த பட்டணம் காவேரி நகரில் இறந்தவர் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து, 50-லட்சம் ரூபாய் மதிப்பு நிலத்தை அபகரிக்க முயற்சித்த நான்கு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: இறந்தவர் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து, 50-லட்சம் ரூபாய் மதிப்பு நிலத்தை அபகரிக்க முயற்சித்த நான்கு பேரை, கோவை போலீசார் தேடி வருகின்றனர்.

சூலூர் அடுத்த பட்டணம் காவேரி நகரில் சரஸ்வதி, மனோரஞ்சிதம் என்ற இரு சகோதரிகளுக்குச் சொந்தமான 10-சென்ட் நிலம் உள்ளது.

இதன் மதிப்பு 50-லட்சம் ரூபாய். இந்த நிலம், இவரது தந்தை அய்யாசாமி 2007-ம் ஆண்டு இறந்து போனதற்குப் பிறகு சகோதரிகள் வசம் வந்தது. இந்த நிலத்தை அபகரிக்க முயன்ற கும்பல், அய்யாசாமி இறந்து போனதை மறைத்து, போலி பத்திரப் பதிவுக்கு ஏற்பாடு செய்தது.

அதன்படி, அய்யாசாமி என்ற பெயரில் போலியான நபரை சிங்காநல்லூர் சார் பதிவாளர் ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தி, மார்ச் 11-ல் விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, ஆள் மாறாட்டம் செய்து பத்திரம் பதிவு செய்திருப்பதாக அறிந்த சார் பதிவாளர், பத்திர வினியோகத்தை நிறுத்தி வைத்தார்.

நிலத்தின் சட்ட பூர்வ வாரிசு தாரர்களான சரஸ்வதி, மனோரஞ்சிதம் ஆகியோர், தங்கள் தந்தை அய்யாசாமி 2007-ம் ஆண்டு இறந்து விட்டதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பித்தனர். அதிர்ச்சியடைந்த சார் பதிவாளர், மோசடி செய்து நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்ட போலியான நபர், நிலத்தை வாங்கிய ஈரோட்டைச் சேர்ந்த அருள் ராஜ், சாட்சி கையெழுத்துப் போட்ட அவிநாசி வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், மதுரை நாகமலையை சேர்ந்த ஜோசப் ஜெயசீலன் ஆகிய நால்வர் மீது, கோவை எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தார்.

விசாரணை நடத்திய கோவை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனப்பிரியா, நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்தார். இந்த நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...