போக்சோ வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு கோவை மாவட்ட எஸ்.பி. வெகுமதி வழங்கி பாராட்டு.!!

போக்சோ வழக்கில் சாட்சிகளைச் சிறப்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற செயலாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்.பி.செல்வ நாகரத்தினம் ரூ.5-ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


கோவை: போக்சோ வழக்கு சாட்சியங்களை முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த காவலருக்குச் சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரம் ஊக்க தொகையைமாவட்ட எஸ் பி செல்வ நாகரத்தினம்வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை கோட்டத்திற்குட்பட்ட ஆழியாறு காவல் நிலையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்ட போக்சோ வழக்கு தொடர்பான விசாரணை, கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குற்றவாளியான விக்னேஷ் என்பவருக்கு 15-வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.20-ஆயிரம் அபராதம் தண்டனையாக வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரக் காரணமாக இருந்த ஆழியாறு முதல் நிலை காவலர் மணிகண்டன் செயலைப் பாராட்டி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் ரூ.5-ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...