ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கிராமம் தோறும் தமிழ்நாடு வேளாண்மைத் துறை சார்பில் மேற்கொள்ள வாகனம் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
கோவை:கோவை மாவட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கிராமம் தோறும் தமிழ்நாடு வேளாண்மைத் துறை சார்பில் மேற்கொள்ள வாகனம் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவங்கி வைத்தார்.
இந்திய அளவில் தானியங்களில் நெல், கோதுமைக்கு அடுத்த படியாக சோளம், கம்பு இராகி, குதிரைவலி, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடப்படுகிறது. தற்போது 2022-ம் ஆண்டினை "சிறுதானியங்கள் ஆண்டு" ஆக அறிவித்து சிறுதானியங்கள் உற்பத்தியைச் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்ய பல்வேறு தொழில் நுட்பங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
சிறுதானியங்களின் சாகுபடி மானாவாரி விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ளது. தமிழ் நாட்டில் சோளம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகமாக இறவை மற்றும் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. மேலும் சிறுதானியங்களின் பயிரின் பரப்பினை அதிகரிக்க விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் போன்றவைகள் மானிய விலையிலும், கை தெளிப்பான், பயிர் பாதுகாப்பு மற்றும் களைக் கொல்லி மருந்துகள் பின்னேற்ப்பு மானியமாகவும், விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கிலோவிற்கு ரூ.30/ விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தொண்டாமுத்தூர், மதுக்கரை, சர்கார்சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், அன்னூர் வட்டாரங்களில் சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார ஊர்தியினை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் .ஜி.எஸ்.சமீரன் தலைமையில் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.
உடன் வேளாண்மை இணை இயக்குநர் சித்ரா தேவி, வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்செல்வி, வேளாண்மை துணை இயக்குநர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.