கோவை மாநகரக் காவல்துறையினர் மாநில அளவில் அவசர உதவி கோரும் அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில் தொடர்ந்து பிப்ரவரி-2022 மாதத்திலும் முதலிடம் பெற்றுள்ளனர்.
கோவை: அவசர உதவி கோரும் அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில், மாநில அளவில் கோவை மாநகர போலீசார் முதலிடம் பெற்றுள்ளனர்.
கோவை மாநகரக் காவல்துறையினர் மாநில அளவில் அவசர உதவி கோரும் அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில் தொடர்ந்து பிப்ரவரி-2022 மாதத்திலும் முதலிடம் பெற்றுள்ளனர்.
சாலை விபத்து, குற்றச்சம்பவங்கள் நடக்கும் போது அவசர போலீஸ் உதவியை நாடி காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்.100ஐ தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் சம்பவ இடத்திற்கு, கோவை மாநகர காவல்துறையினர் 2.38 நிமிடங்களிலும் அதனைத் தொடர்ந்து சென்னை காவல்துறையினர் 2.54 நிமிடங்களிலும் மற்றும் கரூர் காவல்துறையினர் 3.05 நிமிடங்களிலும் விரைந்து செல்வதாக காவல்துறை கூடுதல் இயக்குநர் (ERSS/SPMCR Projects) அறிக்கை அனுப்பியுள்ளார்.
கோவை மாநகரக் காவல்துறை ஆணையர் பிரதீப் குமார் மாநகர காவல்துறையினரைப் பாராட்டி, வரும் காலங்களிலும் பொதுமக்களுக்குச் சேவை புரிந்து தொடர்ந்து முதலிடம் பெற வாழ்த்து தெரிவித்தார்.
கோவை மாநகரக் காவல்துறையினர் மாநில அளவில் அவசர உதவி கோரும் அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில் தொடர்ந்து பிப்ரவரி-2022 மாதத்திலும் முதலிடம் பெற்றுள்ளனர்.
சாலை விபத்து, குற்றச்சம்பவங்கள் நடக்கும் போது அவசர போலீஸ் உதவியை நாடி காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்.100ஐ தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் சம்பவ இடத்திற்கு, கோவை மாநகர காவல்துறையினர் 2.38 நிமிடங்களிலும் அதனைத் தொடர்ந்து சென்னை காவல்துறையினர் 2.54 நிமிடங்களிலும் மற்றும் கரூர் காவல்துறையினர் 3.05 நிமிடங்களிலும் விரைந்து செல்வதாக காவல்துறை கூடுதல் இயக்குநர் (ERSS/SPMCR Projects) அறிக்கை அனுப்பியுள்ளார்.
கோவை மாநகரக் காவல்துறை ஆணையர் பிரதீப் குமார் மாநகர காவல்துறையினரைப் பாராட்டி, வரும் காலங்களிலும் பொதுமக்களுக்குச் சேவை புரிந்து தொடர்ந்து முதலிடம் பெற வாழ்த்து தெரிவித்தார்.