கோவை மாங்கரை வனப்பகுதியில் யானை இறப்பு: நோய் தொற்று காரணமா..? பிபிஇ கிட் அணிந்து மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை…!

நோய் தொற்றால் யானை உயிரிழந்திருக்கலாம் என்பதால் பிபிஇ கிட் உடையணிந்து மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மாங்கரை வனப்பகுதியில், சலீம் அலி பறவைகள் சரணாலையம் அருகே உள்ள வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்த நிலையிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்கு சென்ற கால்நடை மருத்துவர்கள் குழு யானை உயிரிழப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக உயிரிழந்த யானைக்கு சுமார் 30 வயது இருக்கலாம் என்றும், உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், யானைக்கு உடற்கூறு ஆய்வு நடைபெற்றது.



நோய் தொற்றால் யானை உயிரிழந்திருக்கலாம் என்பதால் பிபிஇ கிட் உடையணிந்து மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் சேகரிப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வக முடிவுகள் வந்த பின்னரே, யானையின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்று வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...