மாட்டின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வனப்பகுதியில் ஆழமான குழி தோண்டி காட்டுமாடு புதைக்கப்பட்டது.
கோவை: கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு மாடு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் வனப்பகுதியில், நேற்று மாலை வனக்காப்பாளர், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் ஒரு பெண் காட்டு மாடு இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாடு உயிரழப்பு குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இரவு நேரம் ஆனதால் வனவிலங்கு அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், இன்று மீண்டும் அங்குச் சென்ற வனத்துறையினர் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் முன்னிலையில், முதுமலை வன கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையில் இறந்த காட்டு மாட்டிற்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது காட்டு மாட்டின் பின்னங்கால்கள் இரண்டிலும் காயங்கள் ஏற்பட்டு, இதனால் நீண்டதூரம் காட்டுமாடு மேய்ச்சலுக்காக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போதிய உணவு எடுக்காமல் மாடு இறந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், மாட்டின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வனப்பகுதியில் ஆழமான குழி தோண்டி காட்டுமாடு புதைக்கப்பட்டது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் வனப்பகுதியில், நேற்று மாலை வனக்காப்பாளர், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் ஒரு பெண் காட்டு மாடு இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாடு உயிரழப்பு குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இரவு நேரம் ஆனதால் வனவிலங்கு அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், இன்று மீண்டும் அங்குச் சென்ற வனத்துறையினர் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் முன்னிலையில், முதுமலை வன கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையில் இறந்த காட்டு மாட்டிற்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது காட்டு மாட்டின் பின்னங்கால்கள் இரண்டிலும் காயங்கள் ஏற்பட்டு, இதனால் நீண்டதூரம் காட்டுமாடு மேய்ச்சலுக்காக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போதிய உணவு எடுக்காமல் மாடு இறந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், மாட்டின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வனப்பகுதியில் ஆழமான குழி தோண்டி காட்டுமாடு புதைக்கப்பட்டது.