கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு மாடு - உடற்கூறு ஆய்விற்கு பின் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது…!

மாட்டின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வனப்பகுதியில் ஆழமான குழி தோண்டி காட்டுமாடு புதைக்கப்பட்டது.


கோவை: கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு மாடு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் வனப்பகுதியில், நேற்று மாலை வனக்காப்பாளர், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் ஒரு பெண் காட்டு மாடு இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாடு உயிரழப்பு குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இரவு நேரம் ஆனதால் வனவிலங்கு அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், இன்று மீண்டும் அங்குச் சென்ற வனத்துறையினர் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் முன்னிலையில், முதுமலை வன கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையில் இறந்த காட்டு மாட்டிற்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது காட்டு மாட்டின் பின்னங்கால்கள் இரண்டிலும் காயங்கள் ஏற்பட்டு, இதனால் நீண்டதூரம் காட்டுமாடு மேய்ச்சலுக்காக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போதிய உணவு எடுக்காமல் மாடு இறந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், மாட்டின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வனப்பகுதியில் ஆழமான குழி தோண்டி காட்டுமாடு புதைக்கப்பட்டது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...