கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-முதல் 14-வயதுள்ள மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12-முதல் 14-வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தொற்றிருந்து தற்காத்துக்கொள்ள மத்திய அரசு சார்பில் 18-வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 12-வயது முதல் 14-வயது உள்ள சிறார்களுக்கு நேற்று புதன்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது.

அதன்படி இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-முதல் 14-வயதுள்ள மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா மேற்பார்வையில் மாணவ, மாணவிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
மாணவர்களும் வரிசையாக வந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கிணத்துக்கடவு வட்டாரப் பகுதிகளில் நாள்தோறும் 12-முதல் 14-வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றிருந்து தற்காத்துக்கொள்ள மத்திய அரசு சார்பில் 18-வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 12-வயது முதல் 14-வயது உள்ள சிறார்களுக்கு நேற்று புதன்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது.
அதன்படி இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-முதல் 14-வயதுள்ள மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா மேற்பார்வையில் மாணவ, மாணவிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
மாணவர்களும் வரிசையாக வந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கிணத்துக்கடவு வட்டாரப் பகுதிகளில் நாள்தோறும் 12-முதல் 14-வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.