மருத்துவ குழுவினர் இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்யும் பணிகளை தொடங்கி உள்ளனர். யானையின் உடல் பாக மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
கோவை: கோவை மாங்கரை வனப்பகுதியில் இறந்த ஆண் யானை உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மாங்கரை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஆனைக்கட்டி மாங்கரை, சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே உள்ள வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்த நிலையிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்குச் சென்ற கால்நடை மருத்துவர்கள் குழு யானை உயிரிழப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக உயிரிழந்த யானைக்கு சுமார் 30-வயது இருக்கலாம் என்றும், உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது மருத்துவ குழுவினர் இறந்த யானைக்கு உடல் கூறு ஆய்வு செய்யும் பணிகளைத் துவங்கி உள்ளனர். யானையின் உடல் பாக மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மாங்கரை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஆனைக்கட்டி மாங்கரை, சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே உள்ள வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்த நிலையிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்குச் சென்ற கால்நடை மருத்துவர்கள் குழு யானை உயிரிழப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக உயிரிழந்த யானைக்கு சுமார் 30-வயது இருக்கலாம் என்றும், உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது மருத்துவ குழுவினர் இறந்த யானைக்கு உடல் கூறு ஆய்வு செய்யும் பணிகளைத் துவங்கி உள்ளனர். யானையின் உடல் பாக மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.