மேலும், இந்நிகழ்வில் 12 முதல் 14 வயது உடைய சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல வஞ்சிபாளையம் சமுதாய நலக்கூடம் பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.
இதனை மாநில செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 12 முதல் 14 வயது உடைய சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.