பண மோசடி நடந்தால் உடனடியாக சைபர் கிரைம் கட்டுப்பாடு அறைக்கு அழைத்தால் பணத்தை மீட்க முடியும் - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்…!

மேலும், சைபர் கிரைம் குறித்து புகாரளிக்க 1390 என்ற இலவச தேசிய உதவி எண்ணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வெளியிட்டார்.



கோவை: பண மோசடி நடந்தால் உடனடியாக சைபர் கிரைம் கட்டுப்பாடு அறைக்கு அழைத்தால் பணத்தை மீட்க முடியும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

சைபர் கிரைம் குறித்து புகாரளிக்க 1390 என்ற இலவச தேசிய உதவி எண்ணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வெளியிட்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் கூறும் போது:-

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 21 அன்று சைபர் கிரைம் காவல் நிலையம் துவங்கியது.

இந்த அலுவலகத்தில் நேஷனல் சைபர் க்ரைம் ரிப்போர்ட் போஸ்டல் மூலமாகவும் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பண மோசடி தொடர்பாக 2021ம் வருடம் 21 வழக்கும், 2022ம் ஆண்டு 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை ரூ.18.57 லட்சம் பணம் கைப்பற்றப்பட்ட பாதிக்கப்பட்டவருக்கு திரும்ப கொடுக்கப்பட்டு உள்ளது.

பண மோசடி சம்பந்தமான புகார்களில் ரூ.40.81 லட்சம் பணம் முடக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக இதுவரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மூன்று நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணமோசடி குற்றங்களைத் தடுக்க 1930 என்ற கட்டணமில்லா புகார் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டால் உடனடியாக இந்த தொலைபேசி எண்ணில் புகார் அளித்தால் உடனடியாக இழந்த பணத்தை மீட்க முடியும் என தெரிவித்தார்.

இணையதள குற்றங்கள் அதிகமாக தற்பொழுது வருகின்றது. படித்தவர்களால் அதிக அளவு வங்கியில் இருந்து பேசுகிறேன், கஸ்டமர் கேரில் இருந்து பேசுகிறேன், என அதிக அளவிலான சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது.

தற்பொழுது, புறநகர் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 74 வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. பதியப்பட்ட வழக்குகள் எந்தெந்த பிரிவின் கீழ் வருகிறது என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...