மேலும், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கியில் வனத்துறையினர் எச்சரிக்கை.
கோவை: நீலகிரி பந்தலூர் அருகே கிராமப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதால், வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட சூசம்பாடி கிராமத்தை ஒட்டிய புதரில், சில வாரங்களுக்கு முன் இரண்டு பசு மாடுகளை ஒரே நாளில் புலி தாக்கிக் கொன்றது.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில், குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் புலி வந்து செல்வதை மக்கள் பார்த்துள்ளனர். அங்கு நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, வனத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கியில் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட சூசம்பாடி கிராமத்தை ஒட்டிய புதரில், சில வாரங்களுக்கு முன் இரண்டு பசு மாடுகளை ஒரே நாளில் புலி தாக்கிக் கொன்றது.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில், குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் புலி வந்து செல்வதை மக்கள் பார்த்துள்ளனர். அங்கு நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, வனத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கியில் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.