கடந்த ஆண்டு டிசம்பர் 8ல் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட, 14 பேர் உயிரிழந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு அங்கு கடற்படை தளபதி மௌன அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெலிங்டன் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியை கடற்படை தளபதி நேரில் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில், கடற்படை தளபதி ஹரிகுமார் பயிற்சி ராணுவ அதிகாரிகள் மத்தியில் நேற்று பேசினார். முப்படைகளுக்கான தற்போதைய பயிற்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், தொழில் முறை ராணுவ கல்விக்கான சிறந்த மையமாக செயல்படும் கல்லூரியை மேம்படுத்த, புதிய பாடத் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து, அதிகாரிகள் பேசினர்.
நேற்று மாலை நஞ்சப்பாசத்திரம் வந்த தளபதி ஹரிகுமார், கடந்த ஆண்டு டிசம்பர் 8ல் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட, 14 பேர் உயிரிழந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு அங்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில், கடற்படை தளபதி ஹரிகுமார் பயிற்சி ராணுவ அதிகாரிகள் மத்தியில் நேற்று பேசினார். முப்படைகளுக்கான தற்போதைய பயிற்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், தொழில் முறை ராணுவ கல்விக்கான சிறந்த மையமாக செயல்படும் கல்லூரியை மேம்படுத்த, புதிய பாடத் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து, அதிகாரிகள் பேசினர்.
நேற்று மாலை நஞ்சப்பாசத்திரம் வந்த தளபதி ஹரிகுமார், கடந்த ஆண்டு டிசம்பர் 8ல் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட, 14 பேர் உயிரிழந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு அங்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.