இதுகுறித்து ஆர்.எஸ். புரம் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை ஆர்.எஸ். புரம் அருகே லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவர் சிங்கப்பூரில் பட்டமேற்படிப்பு படித்தவர். இவர் தனக்கு வெளிநாட்டு தொடர்புகள் அதிகமாக இருப்பதாகவும், அதன் மூலமாக அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தரமுடியும் என்றும் நண்பர்கள் வட்டாரத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில், அதை நம்பி பலர் ஆதித்தனை நாடியுள்ளனர். ஆதித்யன் லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதற்கும், பிரிட்டன் விசா வாங்குவதற்கும் பணம் செலவாகும் என்று கூறி ஒரு பெரிய தொகையை வசூல் செய்தார். வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகும் ஆசையில் இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.
மேலும், இரு ஐடி ஊழியர்கள் கார்த்திக் மற்றும் பிரபாகரன் என்ற இருவரிடம் 38 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி உள்ளார். பணம் கொடுத்த எவருக்கும் ஆதித்யன் இதுவரை வேலை வாங்கி தரவில்லை.
இதனையடுத்து, பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை மிரட்டவும் தொடங்கியுள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த கார்த்திக் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், ஆதித்தியனை ஆர்.எஸ். புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவர் சிங்கப்பூரில் பட்டமேற்படிப்பு படித்தவர். இவர் தனக்கு வெளிநாட்டு தொடர்புகள் அதிகமாக இருப்பதாகவும், அதன் மூலமாக அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தரமுடியும் என்றும் நண்பர்கள் வட்டாரத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில், அதை நம்பி பலர் ஆதித்தனை நாடியுள்ளனர். ஆதித்யன் லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதற்கும், பிரிட்டன் விசா வாங்குவதற்கும் பணம் செலவாகும் என்று கூறி ஒரு பெரிய தொகையை வசூல் செய்தார். வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகும் ஆசையில் இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.
மேலும், இரு ஐடி ஊழியர்கள் கார்த்திக் மற்றும் பிரபாகரன் என்ற இருவரிடம் 38 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி உள்ளார். பணம் கொடுத்த எவருக்கும் ஆதித்யன் இதுவரை வேலை வாங்கி தரவில்லை.
இதனையடுத்து, பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை மிரட்டவும் தொடங்கியுள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த கார்த்திக் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், ஆதித்தியனை ஆர்.எஸ். புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.