கோவை ஆர்.எஸ். புரம் அருகே லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்தவர் கைது..!

இதுகுறித்து ஆர்.எஸ். புரம் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆர்.எஸ். புரம் அருகே லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவர் சிங்கப்பூரில் பட்டமேற்படிப்பு படித்தவர். இவர் தனக்கு வெளிநாட்டு தொடர்புகள் அதிகமாக இருப்பதாகவும், அதன் மூலமாக அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தரமுடியும் என்றும் நண்பர்கள் வட்டாரத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில், அதை நம்பி பலர் ஆதித்தனை நாடியுள்ளனர். ஆதித்யன் லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதற்கும், பிரிட்டன் விசா வாங்குவதற்கும் பணம் செலவாகும் என்று கூறி ஒரு பெரிய தொகையை வசூல் செய்தார். வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகும் ஆசையில் இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.

மேலும், இரு ஐடி ஊழியர்கள் கார்த்திக் மற்றும் பிரபாகரன் என்ற இருவரிடம் 38 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி உள்ளார். பணம் கொடுத்த எவருக்கும் ஆதித்யன் இதுவரை வேலை வாங்கி தரவில்லை.

இதனையடுத்து, பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை மிரட்டவும் தொடங்கியுள்ளார்.

இதனா‌ல், அதிர்ச்சி அடைந்த கார்த்திக் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், ஆதித்தியனை ஆர்.எஸ். புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...