ஹிஜாப் தடைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய தமுமுக-வினர் நீதிபதி வேடமணிந்து காவி துண்டு அணிந்து நான் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதற்குத் தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் தீர்ப்பு நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் உடை அணிந்து செல்ல இஸ்லாமிய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக அரசின் தடை உத்தரவு செல்லும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிஜாப் தடைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள் நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் காரர்கள் போல செயல்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் நீதிபதி வேடமணிந்து காவி துண்டு அணிந்து நான் ஆர்எஸ்எஸ் கைக்கூலி என கோஷமிட்டவாறு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக ஹிஜாப் உடை எதிரான தீர்ப்பு நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.