பெண் ஐ.டி.பணியாளரிடம் கணினி உதிரிப்பாகங்கள் தருவதாக கூறி ரூ.1.25-லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: பெண் ஐ.டி.பணியாளரிடம் ரூ.1.25-லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை செட்டிபாளையம் ரோடு வெள்ளலூரைச் சேர்ந்தவர் வாணி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இணையதளத்தில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்குவதற்காகத் தேடினார்.
அப்போது தனியார் நிறுவன பெயரில் பதிவிடப்பட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய நபர்கள் உதிரிப்பாகங்களுக்கான தொகை ரூபாய் 1.25-லட்சத்தைச் செலுத்தினால் உதிரிப்பாகங்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வாணி இரண்டு கட்டங்களாக வங்கி பரிவர்த்தனை மூலமாக ரூபாய் 1.25-லட்சம் அனுப்பி வைத்தார். பிறகு உதிரிப்பாகம் வந்து சேரவில்லை. மீண்டும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாணி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை செட்டிபாளையம் ரோடு வெள்ளலூரைச் சேர்ந்தவர் வாணி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இணையதளத்தில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்குவதற்காகத் தேடினார்.
அப்போது தனியார் நிறுவன பெயரில் பதிவிடப்பட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய நபர்கள் உதிரிப்பாகங்களுக்கான தொகை ரூபாய் 1.25-லட்சத்தைச் செலுத்தினால் உதிரிப்பாகங்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வாணி இரண்டு கட்டங்களாக வங்கி பரிவர்த்தனை மூலமாக ரூபாய் 1.25-லட்சம் அனுப்பி வைத்தார். பிறகு உதிரிப்பாகம் வந்து சேரவில்லை. மீண்டும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாணி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.