'கரண்ட் இல்லாம வாழ்ந்துட்டு இருக்கோம்'- நரிக்குறவர் இன மக்கள் மின் இணைப்பு வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு.!!

துடியலூரை அடுத்த புது முத்துநகர் பகுதியில் வசிக்கக் கூடிய நரிக்குறவர் இனமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: நரிக்குறவர் இன மக்கள் தங்களது இடத்திற்கு மின் இணைப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த புது முத்துநகர் பகுதியில் வசிக்கக் கூடிய நரிக்குறவர் இனமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து சமூக நீதிக் கட்சித் தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், கோவை துடியலூர் அடுத்த புது முத்துநகர், பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வசிக்கும் காலனி உள்ளது.

இங்கு சுமார், 65 குடும்பங்கள், சுமார் 40 ஆண்டுகளாக, வசித்து வருகின்றனர் என்றும் இவர்கள், அந்த பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் நிலையில் இவர்களது, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாகப் போராடி, வருகின்றனர்.

ஆனால் இவர்களின் இடம், புறம்போக்கு இடம் என்பதால், அப்பகுதியில் வசிக்கும், நீலவேணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்து அந்த வழக்கில் வெற்றி பெற்று அவரது வீட்டுக்கு மட்டும் மின் இனைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 64 வீடுகளுக்கு மின் இனைப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர் என தெரிவித்தார். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக அப்பகுதியில் வசிக்கக் கூடிய நரிக்குறவர் இன மக்களுக்கு மின் இணைப்பு வழங்க ஆணவம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...